Saturday 3 February 2018

முருகனைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

வேல் - முருகனின் ஆயுதம் :

🙏 முருகப் பெருமானின் வேல், அவரது ஆயுதங்களுள் ஒன்று. அந்த வேலாயுதத்தைக் கொண்டுதான் அவர் அசுரர்களை அழித்தார். முருகன் ஆலயங்கள் சிலவற்றில் வேலைத்தான் பிரதானமாக வைத்து வழிபடுகிறார்கள்.

🙏 வேல் என்ற சொல்லை உச்சரிக்கும் போதே அது நமது உணர்வுக்குள் ஒரு வித அசைவை ஏற்படுத்துகிறது. அதன் காரணமாகத்தான் முருகனின் பக்தர்கள் வேல் வேல், வெற்றிவேல், ஞானவேல், சக்திவேல் என்று தங்கள் வழிபாடுகளின் போது உச்சரிக்கிறார்கள்.

🙏 வேலனை வணங்குவதே நமது முதல் வேலை என்று சொல்வது போல், வேல் முருகனை வணங்கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும். வேண்டியவை யாவும் அருளும் குணம் கொண்டவன் குமரன்.

🙏 முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும். ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம் என்னும் ஆறு பகைவர்களை முருகன் அழித்தார்.

🙏 முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.

🙏 கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரத்தை தினசரி அதிகாலையில் படிப்பவர்களுக்கு அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.

🙏 முருகப்பெருமானை வணங்க திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய் ஆகியவை உகந்த நாட்கள் ஆகும்.

🙏 முருகன் கங்கையால் தாங்கப்பட்டதால் காங்கேயன் என்றும், சரவணப் பொய்கையில் உதித்ததால் சரவண பவன் என்றும், கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும், சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.

🙏 அக்னி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவார். மலைகளில் குடிகொண்டுள்ள குமரனுக்கு சிலம்பன் என்றொரு பெயர் உள்ளது. விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் விசாகன் என்று முருகனை வணங்குவர். விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

No comments:

Post a Comment