Thursday 10 May 2018

கண்டுபிடியுங்க பார்க்கலாம் !!

1. ராஜாவும், ராணியும் சுற்றுலா போறாங்க. அவங்களுக்கு மூன்று மகன்கள். எல்லா மகன்களுக்கும் கல்யாணம் ஆயிடுச்சி. அந்த மகன்களுக்கு மூன்று மகள்கள் இருக்காங்க. அப்படீனா சுற்றுலாவுக்கு மொத்தம் எத்தனை பேர் போயிருப்பாங்க?

2. ஒரு ஆள் நிலத்த பார்த்துப் போயிக்கிட்டிருக்காரு. அவர் கிட்ட ஒரு மூட்டை இருக்கு. அதைப் பிரிக்காம இருந்தா, அவர் இறந்திடுவார். அப்படி அந்த மூட்டையில என்னதான் இருக்கு?

3. இருபத்தி இரண்டை சீனாவில் எப்படிச் சொல்லுவாங்க?

4. ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் திருடன் புகுந்து கடை மேலாளரைக் கல்லாப் பெட்டியோட 'கோட் வேர்ட்"டை (ஊழனந றழசன) சொல்லும்படி மிரட்டுகிறான். 'இந்தக் கல்லாப் பெட்டிக்கான கோட் வேர்ட் தினந்தோறும் மாறும். என்னை மட்டும் அடிச்ச, உனக்கு எப்பவுமே அந்த கோட் வேர்ட் தெரியாம போயிடும்" என்கிறார் மேலாளர். ஆனால், அந்த கோட் வேர்டை திருடன் சட்டெனக் கண்டுபிடித்துவிடுகிறார். எப்படி?

விடை :

1. 2 - ராஜாவும், ராணியும் மட்டும் தானே சுற்றுலா போனாங்க.

2. பாராசூட்

3. இருபத்தி இரண்டு தான். சீனாவில் தானே சொல்லச் சொன்னோம், சீன மொழியில் இல்லையே !

4. code word =  'தினந்தோறும் மாறும்"

தெரிந்துக் கொள்ளுங்கள் !!

🎀 1994ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் அதிபராக நெல்சன் மண்டேலா பதிவியேற்ற நாள்.

🎀 சிலந்திகளுக்கு நீல நிறத்தில் இரத்தம் இருக்கும்.

43 ஆண்டுகள் வாழ்ந்து மடிந்த ஸ்பைடர்!
நம்பர்-16 என்று அழைக்கப்படும் சிலந்திப் பூச்சிதான், உலகிலேயே அதிக ஆண்டுகள் உயிர் வாழ்ந்த சிலந்தியாகும். கடந்த 1974ஆம் ஆண்டுமுதல் அந்த சிலந்தியை ஆய்வகத்தில் வைத்து பல்வேறு ஆராய்ச்சிகளை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் நடத்தியுள்ளனர். ஒவ்வாமை காரணமாக அது சமீபத்தில் இறந்தது. சிலந்திகள் பொதுவாகவே அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை மட்டுமே உயிர் வாழக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

comedy

இது சிரிக்க மட்டுமே !!
சிவா : தைக்கும், சித்திரைக்கும் என்ன வித்தியாசம்..?
துரை : தை மாசம் நாம் சூரியனுக்கு பொங்கல் வைப்போம். சித்திரை மாசம் சூரியன் நமக்கு பொங்க வைக்கும்.
சிவா : 😀😀

ஒருவர் : ஏங்க, மதுரைக்கு துரு பஸ் இருக்கா?
மற்றவர் : இல்லீங்க. எல்லாமே பெயிண்ட் அடிச்ச பஸ்தான்...!
ஒருவர் : ?????

தலைமை ஆசிரியர் : டேய்.. எவன்டா தமிழ் ஆசிரியர் காலைப் பிடிச்சி வாரி விட்டது?
மாணவன் : சார்.. நேத்து ஸ்கூல் விட்டதும் அவர்தான் 'நாளை காலை வாருங்கள்"னு சொன்னார்.
தலைமை ஆசிரியர் : 😇😇