Saturday 31 March 2018

பொது இடங்களில் வை-பை பயன்படுத்தும்போது கவனம் தேவை..!

பொது இடங்களில் வை-பை பயன்படுத்தும்போது கவனம் தேவை..!
பொது வை-பை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை !!
📲 இலவச வை-பை, இன்டர்நெட் பிரியர்களுக்கான வரம் என்று தான் சொல்ல வேண்டும். மால்கள், கபேக்கள், ரயில் நிலையங்கள் என செல்லும் இடங்களில் எல்லாம் 'வை-பை" இணைப்பு இலவசமாக கிடைப்பது கொண்டாட்டமாகத்தான் இருக்கும்.

📲 ஆனால் பொது இடங்களில் இப்படி வை-பை இணைப்பை பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். வைரஸ் பரவுவது, மற்றவர்களால் வேவு பார்க்கப்படுவது, தகவல் திருட்டு போவது என பல்வேறு பாதிப்புகள் ஏற்பட பொது வை-பை காரணமாக இருக்கிறது. எச்சரிக்கையாக பொது வை-பை வசதியை பயன்படுத்த சில யோசனைகளை பார்க்கலாம்...

📲 வை-பை இணைப்பு கொடுக்கும்போது அதிக கவனம் தேவை. பாதுகாப்பான மற்றும் நம்பிக்கைக்குரிய நிறுவனம் அல்லது இடங்களில் உள்ள வை-பை இணைப்புகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.

📲 உங்கள் எண், பெயர், மொபைல் மாடல் போன்ற பெயர்களிலேயே பலர் இருக்க வாய்ப்பு உண்டு என்பதால் கவனமாக இணைப்பு ஏற்படுத்த வேண்டும்.

📲 வை-பை இணைப்பு பெறுவதற்காக நீங்கள் தரும் பாஸ்வேர்டுகளை வைத்து ஹேக்கர்கள், உங்கள் தகவல்களை எளிதாக கையகப்படுத்த வாய்ப்பு உண்டு. இதனால் பணப்புழக்கம் சம்பந்தமான தகவல்கள், நெட் பேங்கிங் பாஸ்வேர்டுகள் ஆகியவை திருட்டு போகக்கூடும்.

📲 விண்டோஸ் இணையதளங்களில் பொது வை-பை இணைப்பு கொடுக்கும் முன்பாக control panel, network and sharing center, change advanced sharing settings என்ற வரிசையில் உள்ளே சென்று public என்பதற்கு turn off என்பதை சொடுக்கி 'செட்" செய்து கொள்ளுங்கள். இது வை-பை இணைப்பில் இடையில் மற்றவர் நுழைவதை தடுக்கும்.

📲 பிரத்யேக வி.பி.என். எண்ணை பயன்படுத்தி வை-பை வசதிக்குள் நுழைவது மிகவும் பாதுகாப்பானது. இணையத்தில் உங்கள் வேலையை முடித்ததும் கண்டிப்பாக 'லாக் ஆப்" கொடுத்து வெளியேறுவதை வழக்கமாக்குங்கள்.

📲 குரோம், பயர்பாக்ஸ், ஒபேரா போன்ற உலாவிகளில் HTTPS Everywhere என்ற வசதி இருக்கும். இது நாம் அனுப்பும் தகவல்களை சங்கேத குறியீடுகளாக மாற்றி அனுப்பக்கூடியது என்பதால் பாதுகாப்பு உறுதியாகும்.

📲 சில வேளைகளில் வை-பை எல்லை முடிவடையும் இடங்களில் பிரவுசிங் செய்ய நேர்ந்தால் 'forget the network" என்ற எச்சரிக்கை வரலாம். இதனால் இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப்படும். மீண்டும் வை-பை எல்லைக்குள் நுழைய நேர்ந்தால் மீண்டும் தானாக இணைப்பு ஏற்பட்டுவிடும்.


📲 இதுபோன்ற அசௌகரியங்களை தடுக்க control panel, Network and sharing center என்ற வரிசையில் சென்று connect automatically when this network is in range என்பதில் உள்ள 'டிக்" குறியை அகற்றுங்கள்.  Wireless properties என்ற ஆப்ஷனை சொடுக்கி வையுங்கள்.

Saturday 24 March 2018

கோடைகாலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்கள்..!

கோடையில் உண்ண வேண்டிய பழங்களின் வகைகள் !


முலாம் பழத்தின் பயன்கள் :

🍅 முலாம் பழத்தில் புரதச்சத்து, கார்போஹைட்ரேட், சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, சோடியம், தாமிரம், கந்தகம், குளோரின், வைட்டமின்கள் ஏ, பி, சி, ஆக்சாலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.

🍅 முலாம் பழத்தை சாப்பிட்டால் மூல நோய் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும்.

🍅 அஜீரணத்தை குணப்படுத்தும் தன்மை முலாம் பழத்திற்கு உண்டு.

🍅 முலாம் பழ சதையுடன் தேன் கலந்து சாப்பிட்டால் வாய்ப்புண், தொண்டைப்புண் குணமாகும். கண் பார்வையை அதிகரிக்கும் சக்தி இதற்கு உண்டு.

இளநீரின் பயன்கள் :

🍈 கோடைகாலம் வந்துவிட்டது. கொதிக்கும் வெயிலில் ஏற்படும் தாகத்தை தணிக்க, இளநீருக்கு மிஞ்சியது எதுவுமில்லை.

🍈 கோடைகாலத்தில் உடல் சூடு அதிகமாவதால் ஏற்படும் வயிற்றுக் கோளாறுகளை இளநீர் பருகுவதால் தடுக்கலாம்.

🍈 காலையில் இளநீர் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. இது உடலுக்கு ஊக்கமும் சத்தும் தரும் ஆரோக்கியமான மருந்து.

🍈 சிறுநீரில் கற்கள் உருவாகாமல் இருக்க இளநீர் உதவுகிறது.

🍈 இளநீரில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளது. இதுதவிர இளநீரில் வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் உள்ளன.

நுங்கின் பயன்கள் :

🍑 கோடையில் நம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு.

🍑 நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மெக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.

🍑 உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன், நுங்கை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

தர்பூசணியின் பயன்கள் :

🍉 தர்பூசணி கோடைகாலத்தில் தாகத்தையும், களைப்பையும் தணிக்கக்கூடிய அற்புதமான பழம்.

🍉 இதில் வைட்டமின் பி1, சுண்ணாம்பு சத்து மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இது வெள்ளரிப்பழ இனத்தை சேர்ந்தது.

🍉 தர்பூசணி அதிக இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது.

Monday 19 March 2018

கால் மேல் கால் போட்டு உட்காரக்கூடாது என சொல்வது ஏன் தெரியுமா?

கால் மேல் கால் போட்டு உட்காரக்கூடாது என சொல்வது ஏன் தெரியுமா?
கால் மேல் கால் போட்டு உட்காரலாமா?
 பல மக்களிடம் கால் மேல் கால் போட்டு உட்காரும் பழக்கம் இருக்கும். இது சிலருடைய குணமாக இருக்கலாம் அல்லது ஒரு சிலரோ மற்றவர்களை பார்த்து பழகிக்கொள்வார்கள். கால் மேல் கால் போட்டு உட்காராதே... இது என்ன கெட்ட பழக்கம்? என்று நம்மை வீட்டில் அடிக்கடி திட்டுவார்கள். அது நம்முடைய நலனுக்காகவே கூறுவர்.

இரத்த அழுத்தம் :

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலைசெய்யும் சூழலில் இருப்பவர்களுக்கு, உடல்பருமன் பிரச்சனை, சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் அதிகம். இதனுடன், கால் மேல் கால் போட்டு அமரும்போது, இரத்த அழுத்தம் அதிகமாகி, இதயம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.

அது மட்டுமல்லாமல் எலும்புகளின் இணைப்பில் அழுத்தம் ஏற்பட்டு நரம்புகளை சுருக்குகிறது. இதனால் இரத்த ஓட்டம் தடைபட்டு கால்களின் கீழ்ப்பகுதி நரம்புகளை வீக்கம் அடையச் செய்யும். இதுவே நாளடைவில் நரம்புப் பிரச்சனை வரவும் வழிவகுக்கிறது.

பெண்கள் ஏன் கால் மேல் கால் போட்டு உட்காரக்கூடாது :

பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்காரக்கூடாது என நம் முன்னோர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். இதை பெண் அடிமைத்தனம் என இன்றைய நாகரீக பெண்கள் சொல்கின்றனர். ஆனால் அது தவறு.

கால் மேல் கால் போட்டு அமர்வதை திமிர், அகங்காரம், ஒழுங்கீனம் என்று சொல்லுவார்கள் அதற்கு காரணம் நம்மில் பல பெண்களுக்கு தெரியாது.

இரத்த ஓட்டம் :

பெண்கள் கால் மேல் கால் போட்டு அமர்வதால், கால் மற்றும் அடிவயிறு பகுதிக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராக அமைவதில்லை.

கர்ப்பப்பை பாதிக்கும் :

கால் மேல் கால் போட்டு உட்காருவதால் கால் பகுதியில் இரத்த அழுத்தத்தினை உருவாக்கிவிடும் எனவும், கர்ப்பப்பை கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நம் முன்னோர்கள் சொன்ன எதையும் நாம் உதாசினப்படுத்தி விடக்கூடாது. அதிலும் சில நன்மைகள் இருக்கும் என்று நம்ப வேண்டும்.

Saturday 17 March 2018

நீங்கள் என்றும் இளமையோடு இருக்க வேண்டுமா?

நீங்கள் என்றும் இளமையோடு இருக்க வேண்டுமா ?


👉 தினமும் நீர்ச்சத்து நிரம்பிய காய்கறிகள், பழ வகைகளை சாப்பிட்டு வந்தால் நமது சருமத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் நலம் தரும். இப்பொழுது என்றும் இளமையோடு இருக்க சாப்பிட வேண்டிய பழங்கள் மற்றும் காய்கறிகள் பற்றி காண்போம்.

👉 கேரட்டில் 87 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பி உள்ளது. மேலும் மற்ற காய்கறிகள், பழங்களைவிட அதிக அளவில் பீட்டா கரோட்டீன் கேரட்டில் உள்ளது.

👉 தினமும் ஒரு கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமத்திற்கும், நுரையீரலுக்கும் நன்மை தரும்.

👉 தினமும் தக்காளிப் பழத்தை ஜூஸ் போட்டு பருகினால், அதிலுள்ள 90 சதவீதம் நீர்ச்சத்து நமக்கு கிடைக்கிறது. அதனை தொடர்ந்து பருகி வந்தால் சருமம் புத்துணர்வுடனும், பளபளப்பாகவும் இருக்கும்.

👉 தர்பூசணி பழத்தில் 92 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பி இருப்பதோடு கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட தாது உப்புகள் அடங்கியுள்ளது. இவை சருமத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும்.

👉 ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை தருவதோடு முதுமையை தள்ளிப் போடவும் உதவுகிறது.

👉 முள்ளங்கிக்கு, முதுமையை தள்ளிப்போடும் சக்தி உண்டு. அதிலிருக்கும் நீர்ச்சத்துக்களும், வைட்டமின்களும் தேகத்திற்கு பொலிவு சேர்க்கும்.

👉 ப்ராகோலி 91 சதவீத நீர்ச்சத்து உடையது. அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. அதனை ஜூஸாகவும் பருகலாம். முதுமையை தடுப்பதில் ப்ராகோலிக்கு முக்கிய பங்கு உள்ளது.

👉 அதேபோல் ஸ்ட்ராபெரி பழத்திலும் 92 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இவையும் சருமத்தை இளமையுடன் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கிறது.

👉 குடைமிளகாயில் 92 சதவீத நீர்ச்சத்து நிரம்பி உள்ளது. மேலும், இது வைட்டமின் சி, வைட்டமின் பி6, தையமின், பீட்டா கரோட்டீன் ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

👉 கீரைவகைகளும் 90 சதவீதத்துக்கும் மேல் நீர்ச்சத்துகளை கொண்டிருப்பதோடு உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் வைட்டமின்கள், கனிம சத்துக்களையும் கொண்டுள்ளன. எனவே இவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.




Wednesday 7 March 2018

பாதாமின் நன்மைகள்..!



பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு போன்ற சத்துக்கள் உள்ளது. தினமும் இரவில் பனிரெண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதை அரைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும் மற்றும் நரம்புகளைப் பலப்படுத்தும்.

👉 அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும். இதனை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் பலவித நன்மைகளை உண்டாக்கும்.

மூளையை பலப்படுத்தும் :

👉 வயோதிகத்தில் வரக்கூடிய அல்சீமர் நோய் எனப்படுகிற மறதி நோயைத் தவிர்ப்பதில் பாதாம் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அதை இளம் வயதிலிருந்தே சாப்பிட்டுப் பழக வேண்டும்.

நரம்பு தளர்ச்சி :

👉 பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை. புத்திக்கூர்மைக்கும் உதவுபவை. நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது.

சரும ஆரோக்கியம் :

👉 பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் இரவில் சருமத்தை மசாஜ் செய்தால், உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் இருக்கும்.

எடை குறைய :

👉 பாதாமில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அது உடலில் கலோரியின் அளவை கட்டுப்படுத்தி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும். மேலும் இதில் உள்ள புரோட்டீன், வயிற்றினை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கும்.

இரத்த அழுத்தம் :

👉 பாதாமில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இதனை ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரத்தில் சாப்பிட்டால், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

புற்றுநோய் :

👉 நார்ச்சத்து அதிகம் இருக்கும் பாதாமை சாப்பிட்டால், குடலியக்கத்தை சீராக வைத்து, குடல் புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் ஈ பைட்டோ கெமிக்கல் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் இருப்பதால், மார்பக புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் வளர்வதை தடுக்கும்.

சீரான இரத்த ஓட்டம் :

👉 மக்னீசியம் பாதாமில் அதிகம் இருப்பதால், இது உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சீராக பாய உதவியாக இருக்கும். மேலும் இதில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கவும் செய்யும். இதனால் நன்கு சுறுசுறுப்புடன் வேலை செய்யலாம்.

நீரிழிவு :

👉 பாதாமில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஆய்வு ஒன்றில் பாதாம் சாப்பிட்டால், உணவிற்கு பின் இரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை குறைத்து, சீராக வைக்க உதவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளத