Monday 26 February 2018

உங்களிடம் உள்ளது ஆசையா? பேராசையா?

உங்களிடம் உள்ளது ஆசையா? பேராசையா?
ஆசை! பேராசை!

ஆசைக்கும் பேராசைக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால்

ஆசை என்பது ஒரு துவக்கத்தின் முடிவு. பேராசை என்பது ஒரு முடிவின் துவக்கம்.

இதை அறிந்துதான் சத்குரு அத்தனைக்கும் ஆசைபடு என்றார். பேராசைபடு என்று சொல்லவில்லை.

திரு.அப்துல் கலாம் அவர்கள் இதை மையமாக வைத்துதான் கனவு காணுங்கள் என்றார்.

இதை விவேகானந்தர் நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்கிறார்.

ஆசைபடாமல் இருந்தால் மனிதன் ஆகாய விமானம் கண்டுபிடித்திருக்கமாட்டான். அந்த ஆசை அதிகமாகி பேராசையாக உருமாறிய பின்புதான் அனைத்தையும் அழிக்கும் ஆயுதத்தை கண்டுபிடித்தான்.

ஆசை அழிவை தருவதில்லை பேராசைதான் அழிவை தருகிறது. உனக்கு என்ன கிடைக்குமோ அதுதான் கிடைக்கும். உனக்கு என்ன வந்து சேருமோ அதுதான் வந்து சேரும். அதை பெற நினைத்தால் அது ஒரு நல்ல துவக்கத்தின் முடிவு. அடுத்தவர்க்கு போய் சேருவதை தனக்கானது என்று அதை தன்வசப்படுத்த நினைத்தால் அது பேராசை அது ஒரு முடிவின் துவக்கம்.

ஒரு துவக்கத்தின் முடிவை அல்லது ஒரு முடிவின் துவக்கத்தை எடுப்பது அவரவர் வாழ்க்கையில் உள்ளது. பணிவு..!
  அசோக மன்னர் ஒரு நாள் தன் நாட்டை சுற்றிக் கொண்டு ரதத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவி, மன்னரும் அவரது ஆட்களும் செல்ல வழிவிட்டு, ஓரமாக ஒதுங்கி நின்றார்.

அதைப் பார்த்த அசோக சக்கரவர்த்தி உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு, இறங்கி சென்று அந்த வயோதிக துறவியின் காலில் நெடுஞ்சண் கிடையாக விழுந்தார். துறவியும் தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசிர்வதித்தார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் ஒரு நாட்டின் மன்னர் ஒன்றும் இல்லாத துறவி காலில் விழுவதா? என்று சங்கடப்பட்டார். அரண்மனைக்கு சென்றதும் அரசரிடம் தமது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அதைக் கேட்ட அசோக மன்னர் சிரித்துவிட்டு, அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல், ஒரு விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார்.

ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை, மூன்றும் எனக்கு உடனே வேண்டும் ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே! என்று கட்டளையிட்டார். அரச கட்டளையை நிறைவேற்ற ஏவலர்கள் நாலாபக்கமும் அனுப்பி வைத்தார். ஆட்டுத்தலை கிடைப்பதற்கு அதிக சிரமம் இருக்கவில்லை. ஓர் இறைச்சிக் கடையில் அது கிடைத்து விட்டது. புலித் தலையும் ஒரு வேட்டைக்காரனிடம் கிடைத்தது.

மனிதத் தலைக்கு, சுடுகாட்டிற்கு சென்று ஒரு பிணத்தின் தலையை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர். மூன்றையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், இம்மூன்றையும் சந்தையில் விற்றுப்பொருள் கொண்டு வாருங்கள் என்றார். மன்னரின் கட்டளைப்படி சந்தைக்கு சென்றார்.

ஆட்டுத் தலை அதிக சிரமமின்றி விலை போனது. புலியின் தலையை கடைசியில் ஒரு வேட்டைக்காரன் எடுத்துக் கொண்டான். ஆனால் மனிதத் தலையைப் பார்த்தவர்கள் அருவருப்புடன் பின் வாங்கினர். ஒரு காசுக்கு கூட அதை வாங்க யாரும் முன்வரவில்லை. அரண்மனை திரும்பிய அமைச்சர் ஆட்டுத் தலை உடனே விலை போனதையும், புலித்தலை விலை போனதையும் மனிதத் தலையை வாங்க ஆளில்லை என்பதையும் தெரிவித்தார்.

அப்படியானால் அதை யாருக்காவது இலவசமாகக் கொடுத்து விடுங்கள்! என்றார் அசோகர். ஆனால் இலவசமாகக் கூட அதனை வாங்கிக் கொள்ள யாருமே முன்வரவில்லை.

இப்போது அசோக மன்னர், தன் அமைச்சரிடம் பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர் போய்விட்டால், இந்த உடம்பு கால் காசு கூடப் பெறாது. இலவசமாகக் கூட இதனை யாரும் தொடமாட்டார்கள். இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது, தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் தான் துறவிகள். அத்தகைய துறவிகளின் காலில் விழுந்து வணங்குவதில் தவறில்லை என்றார்.

நீதி:
பணிந்தவர்களும், துணிந்தவர்களும் வாழ்வில் தோற்றதாக சரித்திரம் இல்லை.

இவையெல்லாம் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாத உணவுகள்..!

இவையெல்லாம் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாத உணவுகள்...!



⭐ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள், சாப்பிடக்கூடாத உணவுகள் பற்றி இங்கு காண்போம்.

சாப்பிடக்கூடாத உணவுகள் :

⭐ உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பரங்கிக்காய் போன்றவற்றை சாப்பிடக்கூடாது.

⭐ அதைப்போல் வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், அன்னாசிப்பழம், சீத்தாப்பழம், சப்போட்டா பழம், தர்பூசணி, பேரிட்சை இனிப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

⭐ மேலும் எருமை பால், பாலாடை, தயிர், வெண்ணெய், நெய், பால்கோவா, கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது.

⭐ ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றை சாப்பிடக்கூடாது.

⭐ தேங்காய் எண்ணெய், வனஸ்பதி, பாமாயில், குளிர்பானங்கள், சர்க்கரை, வெல்லம், இனிப்பு பலகாரங்கள், சிப்ஸ், வடை, முறுக்கு, பூரி, சமோசா போன்ற எண்ணெயில் பொரித்த பலகாரங்களை தவிர்க்க வேண்டும்.

⭐ பிரட், கேக், பப்ஸ், ஐஸ்கிரீம், பிஸ்கட், மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், ஊறுகாய், தேங்காய், வேர்கடலை போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உடனடியாக ஆற்றலை தருவதால், உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.

சாப்பிடக்கூடிய உணவுகள் :

⭐ மேலே கூறிய காய்கறிகளை தவிர மற்ற எல்லாக்காய்களையும், கீரைகளையும் சாப்பிடலாம். மேலும் பீட்ரூட், கேரட்டை அளவாக சாப்பிடலாம்.

⭐ ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, பேரிக்காய், மாதுளை, சாத்துக்குடி, பப்பாளி, திராட்சை போன்ற பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.

⭐ அதுமட்டுமில்லாமல் மோர், பசும்பால், கொழுப்பு நீக்கப்பட்ட பால் ஆகியவை சாப்பிடலாம்.

⭐ கோழிக்கறி, மீன், முட்டையின் வெள்ளைக்கரு போன்ற அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

⭐ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணெயை அளவாக பயன்படுத்த வேண்டும்.

⭐ டீ மற்றும் காபி ஆகியவற்றை அளவோடு தான் குடிக்க வேண்டும். வெள்ளரி, முளைக்கட்டிய பாசிப்பயிறு, சுண்டல், முந்திரி, பாதாம், வால்நட் (1 முதல் 2) போன்றவற்றை சாப்பிடலாம்.




வாங்க சிரிக்கலாம் கொஞ்சம் கவலைய மறக்கலாம்!

வாங்க சிரிக்கலாம் கொஞ்சம் கவலைய மறக்கலாம்!
சிரிக்க மட்டுமே !!

தொண்டன் 1 : தேர்தல் நேரத்துல நாயா உழைச்சேனு தலைவர் மேடையில பேசுனது தப்பா போச்சு...
தொண்டன் 2 : ஏன் என்னாச்சு...?
தொண்டன் 1 : இப்பெல்லாம் கூட்டத்துல யாரும் தக்காளி, முட்டை வீசறதில்லை... பிஸ்கெட் தான் வீசறாங்க....

அப்பா : ஏண்டா பார்முலாலாம் விரல்ல எழுதி வச்சுருக்க..
மகன் : எங்க டீச்சர் தான் சொன்னாங்க பார்முலாலாம் ஃபிங்கர் டிப்ஸ்ல இருக்கனும்னு.
அப்பா : ??????
டாக்டர் : இந்த டாக்டர் தொழிலையே விட்டுடலாமுன்னு இருக்கேன்...
நண்பர் : ஏன் டாக்டர் பேஷண்ட்ஸ் யாரும் வரதில்லையா?
டாக்டர் : இல்ல.. பேஷண்ட்ஸ் யாரும் பொழைக்கறதில்லை..

ஆசிரியர் : புத்தர் சொன்னது போல் நாம் நமது ஐம்புலன்களை அடக்கினால் என்ன ஆகும்?
மாணவன் : ஆம்புலன்ஸ் வரும் சார்.. உங்கள் பேச்சுக்கு ஒரு சவால் !!

குட்டக் குட்டக் குனியாதே, கட்டுப் பட்டுத் தொலையாதே. திட்ட வட்ட நெஞ்சுடனே விட்டுக் கொடுத்து வாழ்ந்து வெட்ட வெட்டத் துளிர்த்திடு. வாழ்க்கைத் தத்துவம் !!

வாழ்க்கை என்னும் பூட்டிற்கு அன்பே திறவுகோல். அதை தொலைக்காமல் பார்த்துக்கொள்.
சிரி சிரி !!

மன நோயுற்ற ஒருவன் மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்து வரப்பட்டான். அவன் பிரச்சனை என்னவென்று கேட்க அவன் தந்தை சொன்னார், அவன் தான் இறந்து விட்டதாகக் கூறிக் கொண்டிருக்கிறான். எங்காவது வெளியே போகச் சொன்னால் இறந்தவன் எப்படி வெளியே செல்ல முடியும் என்று கேட்கிறான். என்ன சொல்லி சமாதானப்படுத்தினாலும் அதை ஏற்க மறுக்கிறான், அதனால் தான் உங்களிடம் அழைத்து வந்தோம். மருத்துவரும் இது ஒன்றும் பெரிய விஷியமில்லை அவனை எளிதில் நான் சரி செய்து விடுவேன் என்றார். பின் அவர் அவனிடம் திருப்பி கேட்டார். இறந்த மனிதனுக்கு உடலிலிருந்து இரத்தம் வருமா?. அதற்கு அவன் சொன்னான் வராது. மருத்துவரும் ஒரு கத்தியை எடுத்து அவன் உடலில் இலேசாகக்கீற இரத்தம் பீறிட்டது. அவன் குடும்பத்தினர் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர், மருத்துவர் பார்த்தாயா உன் உடலிலிருந்து இரத்தம் வருகிறது. எனவே நீ இறக்கவில்லை. புரிகிறதா என்று கேட்டார். அவன் மிக அமைதியாக சொன்னான். இதுவரை நான் இறந்தவர்கள் உடலிலிருந்து இரத்தம் வராது என்று நம்பி வந்தேன் இப்போதுதான் தெரிந்து கொண்டேன், இறந்தவர் உடலிலிருந்தும் இரத்தம் வரும்..!!

உங்கள் கையெழுத்து உங்களை பற்றி என்ன சொல்கிறது?

உங்கள் கையெழுத்து உங்களை பற்றி என்ன சொல்கிறது?
உங்கள் கையெழுத்தை வைத்தே உங்கள் குணநலன்களை சொல்ல முடியும் !!

🌟 கையெழுத்து குறித்து ஆராயும் கல்விக்கு கிராபாலஜி என்று பெயர். இது ஒரு பழங்கால கலையாகும். இதன்படி ஒருவரது கையெழுத்தை ஆராய்வதன் மூலம் அவரது குணாதிசயங்கள், எதிர்காலம் ஆகியவை குறித்து அறிந்துக்கொள்ள முடியும் என்று கருதப்படுகிறது.

🌟 மனிதர்களின் கையெழுத்து ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொருவரின் கையெழுத்தும் ஏதாவது ஒரு வகையில் மாறுபட்டதாகவே இருக்கும். எழுத்துக்களை எழுதும் முறை, அந்த எழுத்தின் மீது ஏற்படுத்தும் அழுத்தம், வார்த்தைகள் இடையே கொடுக்கும் இடைவெளியின் தூரம் உள்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

அழுத்தி எழுதுபவராக நீங்கள்?

🌟 எழுத்தின் மீது ஒருவர் கொடுக்கும் அழுத்தம் எவ்வாறு உள்ளது என்பதன் மூலம் ஒருவரது விடாமுயற்சி மற்றும் பிடிவாத குணம் குறித்து அறியலாம்.

🌟 காகிதத்தில் ஒருவர் எழுதும் எழுத்து, அந்த காகிதத்தின் பின்புறம் தெரிந்தால் அவர் ஊக்கமும், உற்சாகமும் நிறைந்தவராக இருப்பார். அதே நேரத்தில் அவரிடம் பிடிவாத குணமும் அதிகமாக இருக்கும்.

🌟 உங்களது கையெழுத்து காகிதத்தின் பின்புறம் தெரியவில்லை என்றால் நீங்கள் எதிலும் முனைப்புடன் செயல்படக்கூடியவர்கள், எளிதில் பிறரிடம் நட்புடன் பழகும் தன்மை கொண்டவர்களாக இருப்பீர்கள். மற்றவர்களின் விருப்பத்தின்படி நடப்பதை விரும்பமாட்டீர்கள். உங்கள் விருப்பத்தின்படியே எதையும் செய்வீர்கள்.

எழுத்தின் கோணம் :

🌟 சிலர் எழுதும்போது இடது அல்லது வலதுபுறத்தில் சரிவாக எழுதுவதுண்டு. இவ்வாறு எழுத்துக்களை கோணலாகவும், நேராகவும், சாய்த்தும் சிலர் எழுதுவது உண்டு.

🌟 வலது அல்லது இடதுபுறம் சாய்த்து எழுதுவதன் மூலம் ஒருவர் எந்த அளவுக்கு நட்புடன் பழகுவார் என்பதை அறிந்து கொள்ளமுடியும்.

🌟 ஒருவரது எழுத்து வலதுபுறம் சாய்வாக இருந்தால் அவர் திறந்த மனதுடன் பழகுவார். இயற்கையாகவே கலகலப்பாக பேசும் குணம் கொண்டவர்.

🌟 இடதுபுறம் சாய்வாக எழுதுபவர்கள் அதிக கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். பிறரிடம் எளிதில் பேசிப்பழக தயங்குவார்கள்.

🌟 எழுத்துக்கள் நேராகவும், எழுதும் வார்த்தைகள் நேர்க்கோட்டிலும் அமைந்து இருந்தால் அவர் திட்டமிட்டு வாழ்பவர். சந்தோஷம், துக்கம் எதுவாக இருந்தாலும் அதை சமமாக எடுத்துக்கொள்பவர்.

🌟 இன்னும் சிலர் ஒரு வரியில் பல்வேறு விதமாக எழுதும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் ஒரு எழுத்து வலப்புறமும், மற்றொரு எழுத்து இடப்புறமும், சில எழுத்துக்கள் நேராக ஒரே நேர்க்கோட்டிலும் இருக்கும்.

🌟 இப்படிப்பட்ட கையெழுத்துக்கு சொந்தக்காரர்கள் நிலையற்ற தன்மை கொண்டவர்கள். அவர்கள் எப்போதும் குழப்பத்தில் இருப்பார்கள். எந்த முடிவையும் தெளிவாக எடுக்க தயங்குவார்கள். தானும் குழம்பி அடுத்தவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தக்கூடியவர்கள்.

எழுத்தின் அளவு :

🌟 ஒருவர் எழுதும்போது அவர் எழுதும் எழுத்தின் அளவை வைத்து அவர் எந்த அளவுக்கு தன்னம்பிக்கை கொண்டவர் என்பதை அறிந்துக்கொள்ளலாம்.

🌟 ஒருவரது எழுத்து பெரிய அளவில் அழுத்தமாக இருந்தால் அவரது மனஉறுதியும், தன்னம்பிக்கையும் அதிகமாக இருக்கும். எழுத்துக்கள் சிறிய அளவில் இருந்தால் அவரிடம் தன்னம்பிக்கை குறைவாக காணப்படும்.

🌟 பெரிய எழுத்துக்களாக எழுதுபவர்கள் சமூக வாழ்வில் வெற்றியாளர்களாக திகழ்வார்கள். அவர்கள் சொல்லிலும், செயலிலும் தன்னம்பிக்கை வெளிப்படும்.

Friday 16 February 2018

பொன்மொழிகள் !!

                                                                பொன்மொழிகள் !!
🌟 தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்கிற எண்ணம் தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது - டிரெட்ஸி.

🌟 செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான். செய்யத் தெரியாதவன் போதிக்கிறான் - கர்னல் கீல்.




🌟 ஒரே அடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற முயற்சி தான் உலகில் பல பெருந்துயருக்கு காரணமாயிருக்கிறது - சாமுவேல் பட்லர்.

கைதி தப்பித்தது எப்படி?

                                              கைதி தப்பித்தது எப்படி?


புதிதாகக் கட்டப்பட்ட அந்த சிறைச்சாலையில் நிறையக் கைதிகளை அடைத்தனர். பிறகுதான் தெரிந்தது, அங்கிருக்கும் ஒரு மதில் சுவர் அவ்வளவு சிறியது என்று! யோசித்த சிறை அதிகாரிகள், அந்தச் சுவருக்கு அருகில், 'இங்கு 22,000 வோல்டேஜ் மின்சாரம் செல்கிறது. யாரும் தொட வேண்டாம்" என்று போர்டு மாட்டி, சில கம்பிகளையும் நட்டுவைத்தனர். அந்தச் சிறையில் புதிதாக அடைக்கப்பட்ட ஒரு கைதி அன்றிரவே அந்த மதில் சுவரைத் தாண்டிக் குதித்துச் சென்றான். எப்படி?

.
.
.
.

அவன் எழுதப் படிக்கத் தெரியாதவன். அதனால் அந்த போர்டு வாசகங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தாண்டிக் குதித்துச் சென்றான்!


 

இது கூட உங்களை சந்தோஷப்படுத்துமா?

                                                   இது கூட உங்களை சந்தோஷப்படுத்துமா?

திருத்தமாக உடையணிந்து நேர்த்தியாக இருக்க பழகுங்கள். மனோரீதியாக அது உங்களை தன்னம்பிக்கையாகவும், ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும் வைக்கும்.

😀 புது இடங்களை பார்ப்பது, புது மனிதர்களுடன் பழகுவதெல்லாம் உற்சாகமான வாழ்க்கையின் வழித்தடங்கள்.

😀 எனவே அவ்வப்போது 'வெளியே" செல்லுங்கள். பரிசுத்தமான இயற்கையின் இடங்கள் இதற்கான சிறந்த இடமாக இருக்கும்.

சிரிக்கலாம் வாங்க !!!

                                                   சிரிக்கலாம் வாங்க !!!

 ஒருவர் : இரும்பிக்கிட்டே இருக்கிற அவன், ஏன் டாக்டர் போட்டாவை பார்த்துக்கிட்டே இருக்கான்?
மற்றவர் : அவங்க அம்மா இருமல் வந்தா டாக்டரை பார்க்க சொன்னாங்களாம் அதான்.
ஒருவர் : ?????????????

போலீஸ் : ஏற்கனவே இரண்டு முறை திருடின வீட்ல போய் ஏன் இன்னைக்கு திரும்பவும் திருடின?
திருடன் : காலண்டர்ல இன்று புதுமுயற்சிகளைத் தவிர்க்கவும்னு போட்டிருந்தது அதான்!
போலீஸ் : ???????????

ஒருவர் : என்னோட இராசி, நட்சத்திரம் எல்லாத்தையும் கேட்டுட்டு வீட்டுக்குள்ள ஜோசியர் போறாரே எதுக்கு?
மற்றவர் : கொஞ்சம் அவசரப்படாம இருங்க.. பேப்பரைப் படிச்சிட்டு வந்து உங்களுக்கு பலன் சொல்வாரு!
ஒருவர் : ????????????

நண்பர் 1 : ஏன் அவர், கேஸ் சிலிண்டரை எடுத்துக்கிட்டு டாக்டரை பாக்க போறார் ?
நண்பர் 2 : கேஸ் பிராப்ளம் வந்தால் டாக்டர், தன்னை வந்து பார்க்க சொன்னாராம் அதான்!
நண்பர் 1 : ?????????????

இலை, தழைகள் பாறைகளாக மாறும் அதிசய கோவில்...!

இலை, தழைகள் பாறைகளாக மாறும் அதிசய கோவில்...!
சுருளிமலை அதிசயம்....!


 இந்த உலகம் பல அதிசயங்கள் நிறைந்தது. இன்னும் பல அமானுஷ்ய, அதிசய நிகழ்வுகளுக்கு விடை தேடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படியொரு விடை தெரியாத அதிசயம் சுருளிமலையில் உள்ளது.

அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் தான் அமைத்துள்ளனர். ஆனால் இந்த முருகன் கோவிலுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு!

🌞 தேனி மாவட்டம் சுருளிமலை அருள்மிகு சுருளிவேலப்பர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவிலாகும். இங்கு சுருளிவேலப்பர் மூலவராக உள்ளார்.

🌞 சிவனின் திருமணத்தின் போது, அனைவரும் இமயமலைக்குச் சென்று விட வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்தது. இதனால் உலகு சமநிலையை இழக்க சிவன், தென்பொதிகை எனும் இம்மலைக்கு அகத்தியரை அனுப்பி உலகை சமப்படுத்தினார். பின் இங்குள்ள குகையில் அகத்தியருக்கு மணக்கோலத்தில் சிவன் காட்சியளித்தார்.

🌞 இங்குள்ள அதிசயம் என்னவென்றால், இங்குள்ள விபூதிக்குகையில், மணல் ஈரம் பட்டு காய்ந்த பின்பு விபூதியாக மாறுகிறது. இந்த இடத்தில் உள்ள ஒரு மரத்தின் மீது தொடர்ந்து நீர் கொட்டி அது காய்ந்த பின்பு பாறையாக மாறியது. மேலும் இந்த நீர் பட்ட இலை, தழைகள் தொடர்ந்து 40 நாட்கள் நீரில் நனைந்த பின்னர், பாறையாக மாறியுள்ளது.

🌞 எத்தனை நாட்கள் ஆனாலும் இங்குள்ள பாறைகள் மீது நீர் விழுந்து கொண்டிருந்தாலும் கூட பாசம் பிடிக்காமலும், வழுக்கும் தன்மை இல்லாமலும் இருப்பது அதிசயம் ஆகும்.

🌞 இங்குள்ள நீர் வீழ்ச்சி இசையோடு இணைந்து சுருதி கொடுத்ததால், சுருதி தீர்த்தம் என அழைக்கப்பட்டு, பின்னர் மருவி, சுருளி தீர்த்தம் ஆனது. இங்குள்ள முருகப்பெருமானும் பழனி மலையில் இருப்பது போன்று ஆண்டிக்கோலத்தில் காட்சி அளிப்பதால் இத்தல எம்பெருமான் சுருளியாண்டி என்று அழைக்கப்படுகிறார்.

வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய என்ன வழி?

                                                                       சோம்பேறி..!
   சந்தனபுரம் என்னும் ஊரில் முருகன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் படு சோம்பேறி. அவர் தன் மகனை திருத்த வேண்டும் என்பதற்காக தினம் தினம் எவ்வளவோ முயற்சி செய்தும், அவருடைய மகனைக் கொஞ்சம்கூடத் திருத்த முடியவில்லை. அதனால் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார். அதாவது அவனுக்குத் தனியாக ஒரு செக்கும் இரண்டு மாடுகளும் வாங்கிக் கொடுத்து, எண்ணெய் தயாரித்துப் பிழைத்துக் கொள் என்று கூறினார்.

அவருடைய சோம்பேறி மகன், அப்பொழுதும் திருந்தவில்லை. மாடுகளை செக்கில் பூட்டினான். பூட்டியவுடன், அவற்றின் கொம்புகளில் சலங்கையைக் கட்டி வைத்தான். மாடுகள் செக்கை சுற்றி வரும்போது அந்த சலங்கை சத்தம் கேட்கும். மாடுகள் சுற்றுவது நின்றுவிட்டால் சலங்கை சத்தமும் நின்றுவிடும். அப்போது மட்டும் கவனித்து மாடுகளை ஓட்டினால் போதும். அதுவரை நிம்மதியாக ஓரிடத்தில் படுத்து உறங்கலாம் என்று எண்ணி, அவ்வாறே செய்து முடித்தான். பிறகு அங்கேயே படுத்து தூங்கினான்.

இப்படியே சில நாட்கள் சென்றன. ஒரு நாள், திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்தவன் செக்கை கவனித்தான். செக்கில் எண்ணெய் ஆட்டப்படாமல் அப்படியே இருந்தது. செக்கில் போட்ட எள்ளும் அப்படியே இருந்தது. அருகில் சென்று பார்த்தான். உடனே மாடுகள் நகர தொடங்கின.

செக்கில் போட்ட எள் அப்படியே இருக்கிறது. ஆனால் சலங்கை சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததே எப்படி? அப்படியானால் மாடுகள் ஓடிக்கொண்டுதானே இருந்திருக்க வேண்டும்? எப்படி செக்கில் எண்ணெய் ஆட்டப்படாமலேயே இருக்கிறது என்று யோசித்தான். எப்போதும் செக்கில் எள்ளைப் போட்டு விட்டு தூங்கச் செல்பவன் வழக்கத்திற்கு மாறாக தூங்கச் செல்லாமல் ஓரிடத்தில் மறைவாக நின்று கொண்டு செக்கையும், மாடுகளையும் கவனித்தான்.

சலங்கை சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஆனால் மாடுகள் நகரவே இல்லை. தங்களின் தலையை மட்டும் ஆட்டி சலங்கையை ஒலிக்கச் செய்துகொண்டிருந்தன. சோம்பேறியிடம் பழகிய மாடுகளான அவைகளும் அவனைப் போலவே மாறிப் போயிருந்தன. அப்போதுதான் அவருடைய சோம்பேறி மகனுக்கு சோம்பேறித்தனமாக வாழக்கூடாது என்று புத்தி வந்தது. மனம் திருந்திய அவன் கடுமையாக உழைக்க ஆரம்பித்தான். அவனுடைய அப்பாவும் தன் மகன் திருந்தியதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

நீதி :

சோம்பேறித் தனத்தினால் வாழ்வின் உயர்ந்த நிலையை அடைய முடியாது.

Saturday 3 February 2018

முருகனைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

வேல் - முருகனின் ஆயுதம் :

🙏 முருகப் பெருமானின் வேல், அவரது ஆயுதங்களுள் ஒன்று. அந்த வேலாயுதத்தைக் கொண்டுதான் அவர் அசுரர்களை அழித்தார். முருகன் ஆலயங்கள் சிலவற்றில் வேலைத்தான் பிரதானமாக வைத்து வழிபடுகிறார்கள்.

🙏 வேல் என்ற சொல்லை உச்சரிக்கும் போதே அது நமது உணர்வுக்குள் ஒரு வித அசைவை ஏற்படுத்துகிறது. அதன் காரணமாகத்தான் முருகனின் பக்தர்கள் வேல் வேல், வெற்றிவேல், ஞானவேல், சக்திவேல் என்று தங்கள் வழிபாடுகளின் போது உச்சரிக்கிறார்கள்.

🙏 வேலனை வணங்குவதே நமது முதல் வேலை என்று சொல்வது போல், வேல் முருகனை வணங்கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும். வேண்டியவை யாவும் அருளும் குணம் கொண்டவன் குமரன்.

🙏 முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும். ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம் என்னும் ஆறு பகைவர்களை முருகன் அழித்தார்.

🙏 முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.

🙏 கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரத்தை தினசரி அதிகாலையில் படிப்பவர்களுக்கு அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.

🙏 முருகப்பெருமானை வணங்க திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய் ஆகியவை உகந்த நாட்கள் ஆகும்.

🙏 முருகன் கங்கையால் தாங்கப்பட்டதால் காங்கேயன் என்றும், சரவணப் பொய்கையில் உதித்ததால் சரவண பவன் என்றும், கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும், சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.

🙏 அக்னி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவார். மலைகளில் குடிகொண்டுள்ள குமரனுக்கு சிலம்பன் என்றொரு பெயர் உள்ளது. விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் விசாகன் என்று முருகனை வணங்குவர். விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

இந்திய ஓபன் குத்துச்சண்டை தொடர்: தங்கப் பதக்கம் வென்றார் மேரி கோம்

இந்திய ஓபன் குத்துச்சண்டை தொடரில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார்.
டெல்லியில் நடைபெற்ற இந்தத் தொடரில் கடைசி நாளான நேற்று மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம், பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜோசி காபுகோவை எதிர்த்து விளையாடினார். இதில் மேரி கோம் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். 64 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவிலோவோ பாசுமட்டரி 3-2 என்ற கணக்கில் தாய்லாந்தின் சுடபோன் சீசன்டியை வீழ்த்தி தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.
69 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன் சகநாட்டைச் சேர்ந்த வீராங்கனையான பூஜாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். 60 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சரிதா தேவி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். இறுதிப் போட்டியில் அவர், பின்லாந்தின் மிரா போட்கெனனிடம் 3-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
ஆடவர் பிரிவில் 91 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சஞ்ஜீத் 3-2 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் சஞ்ஜார் துர்ஸ்னோவை வீழ்த்தி தங்கம் வென்றார். 60 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீரர் மணீஷ் கவுசிக் கடைசி நேரத்தில் விலகினார். அரை இறுதி ஆட்டத்தின் போது தலைப் பகுதியில் காயம் ஏற்பட்டதால் அவர் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் மங்கோலிய வீரர் மிஷெல்ட் தங்கப் பதக்கம் வென்றார்.
ஆசிய விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் சதீஷ் குமார் 91 கிலோவுக்கு கூடுதலான எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர் 4-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் பகோடிர் ஜலொலோவிடம் தோல்வியடைந்தார். இதேபோல் வெல்டர்வெயிட் 69 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் தினேஷ் தாகர் இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தானின் உஸ்மான் பட்ரோவிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
81 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் தேவன்ஸூ ஜெய்ஸ்வால் 1-4 என்ற கணக்கில் கியூபாவின் டேவிட் குட்டியர்ஸிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். இதேபோல் மகளிருக்கான 75 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சவீட்டி போரா கேமரூன் வீராங்கனை எஸைன் கோல்டிட்டிடம் தோல்வியடைந்தார்.

Thursday 1 February 2018

அணுக்கதிர் வீச்சால் கூட பாதிக்கப்படாத ஒரே உயிரினம் எது ?

இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

🌟 மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கிறது.

🌟 கண்டமாகவும், நாடாகவும் இருப்பது ஆஸ்திரேலியா மட்டுமே.

🌟 அணுக்கதிர் வீச்சால்கூட பாதிக்கப்படாத ஒரே உயிரினம் கரப்பான்பு+ச்சி.

🌟 கரையான்களுக்கு கண்கள் கிடையாது.

வாழ்க்கையின் முக்கிய ஏழு நிலைகள்.. 1. படிப்பு
2. விளையாட்டு
3. பொழுது போக்கு
4. காதல்
5. 6. 7. ஹலோ... என்ன தேடுறீங்க?

காதல் வந்த பிறகு என்னத்த சொல்ல...!

இது சிரிக்க மட்டுமே !!

கணவர் : செல்லம் சப்பாத்தி சு+ப்பரா செஞ்சிருக்கடி
மனைவி : 😡😡
கணவன் : நல்லாருக்குன்னு தானே சொல்றேன் அப்ரம் ஏன் முறைக்கிற..
மனைவி : அது தோசை
கணவன் : 😷😷

டாக்டர் : டெய்லி காலைல வெந்நீர் குடிங்க.. எல்லாம் சரி ஆகிடும்
நோயாளி : டாக்டர்.. கல்யாணம் ஆனதுல இருந்து காலைல அதான் குடிக்கிறேன்.. என் பொண்டாட்டி அதுக்கு காப்பின்னு பேரு வச்சி இருக்கா..😰😰

டாக்டர் : வாங்க, உட்காருங்க, சட்டைய கழட்டுங்க, வாயைத் திறங்க, நாக்க நீட்டுங்க.. திரும்பி உட்காருங்க, இழுத்து மூச்சு விடுங்க.... இப்ப சொல்லுங்க என்ன செய்யுது ?
வந்தவர் : ஒண்ணுமில்லை டாக்டர், என் மகளுக்குக் கல்யாணம். பத்திரிகை கொடுக்க வந்தேன் .....!

இது சாத்தியம் தான் !!

ஒரு மாருதி 800 ஏலத்தில் விட்டுக்கொண்டிருந்தார்கள்... 5 லட்சம்.. 10 லட்சம்... 20 லட்சம்.. 40 லச்சம் வரை ஏலம் ஏறிக்கொண்டே போனது.. அப்போது அங்கெ வந்த ஒருவன் விசாரித்தான்.. "என்னையா இது..? சாதாரண மாருதி 800... இதுக்குபோயி இத்தனை விலை ஏறுதே..??.."

அங்கிருந்த ஒருவர்.. "விஷயம் தெரியாம பேசாதையா..!! இந்த மாருதி கார் இதுவரை 24 தடவ அக்சிடண்ட் ஆகிருக்கு... 24 தடவையும் கணவன் தப்பிச்சிட்டான்.. மனைவி மட்டுமே செத்துப் போயிருக்காங்க..." என்றார்..

உடனே நம்ம ஆளு கத்தினான்.... "ஒரு கோடி"

கிராமியத் தப்பாட்டம்..!

பறை முழக்கம் தற்போது தப்பாட்டம் என அழைக்கப்படுகிறது. "தப்புதல்" என்றால் "அடித்தல்" என ஒரு பொருள் உள்ளது. அடித்தலோடு ஆட்டமும் சேர்ந்து வருவதால், இது தப்பாட்டம் எனப் பெயர் பெற்றது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகை திணைகளுக்கும், ஐந்து வகை பறைகள் இருந்ததாக சங்க இலக்கியம் கூறுகிறது. திருமணம், கோயில், இறப்பு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே தப்பாட்டங்கள் உள்ளன. மற்ற கிராமியக் கலைகளில் ஒருவர் இசைக்க மற்றொருவர் தான் ஆடுவர். தப்பாட்டத்தில் மட்டும் தான், ஆடுபவரே இசைக்க வேண்டும்.