Monday 26 February 2018

வாங்க சிரிக்கலாம் கொஞ்சம் கவலைய மறக்கலாம்!

வாங்க சிரிக்கலாம் கொஞ்சம் கவலைய மறக்கலாம்!
சிரிக்க மட்டுமே !!

தொண்டன் 1 : தேர்தல் நேரத்துல நாயா உழைச்சேனு தலைவர் மேடையில பேசுனது தப்பா போச்சு...
தொண்டன் 2 : ஏன் என்னாச்சு...?
தொண்டன் 1 : இப்பெல்லாம் கூட்டத்துல யாரும் தக்காளி, முட்டை வீசறதில்லை... பிஸ்கெட் தான் வீசறாங்க....

அப்பா : ஏண்டா பார்முலாலாம் விரல்ல எழுதி வச்சுருக்க..
மகன் : எங்க டீச்சர் தான் சொன்னாங்க பார்முலாலாம் ஃபிங்கர் டிப்ஸ்ல இருக்கனும்னு.
அப்பா : ??????
டாக்டர் : இந்த டாக்டர் தொழிலையே விட்டுடலாமுன்னு இருக்கேன்...
நண்பர் : ஏன் டாக்டர் பேஷண்ட்ஸ் யாரும் வரதில்லையா?
டாக்டர் : இல்ல.. பேஷண்ட்ஸ் யாரும் பொழைக்கறதில்லை..

ஆசிரியர் : புத்தர் சொன்னது போல் நாம் நமது ஐம்புலன்களை அடக்கினால் என்ன ஆகும்?
மாணவன் : ஆம்புலன்ஸ் வரும் சார்.. உங்கள் பேச்சுக்கு ஒரு சவால் !!

குட்டக் குட்டக் குனியாதே, கட்டுப் பட்டுத் தொலையாதே. திட்ட வட்ட நெஞ்சுடனே விட்டுக் கொடுத்து வாழ்ந்து வெட்ட வெட்டத் துளிர்த்திடு. வாழ்க்கைத் தத்துவம் !!

வாழ்க்கை என்னும் பூட்டிற்கு அன்பே திறவுகோல். அதை தொலைக்காமல் பார்த்துக்கொள்.
சிரி சிரி !!

மன நோயுற்ற ஒருவன் மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்து வரப்பட்டான். அவன் பிரச்சனை என்னவென்று கேட்க அவன் தந்தை சொன்னார், அவன் தான் இறந்து விட்டதாகக் கூறிக் கொண்டிருக்கிறான். எங்காவது வெளியே போகச் சொன்னால் இறந்தவன் எப்படி வெளியே செல்ல முடியும் என்று கேட்கிறான். என்ன சொல்லி சமாதானப்படுத்தினாலும் அதை ஏற்க மறுக்கிறான், அதனால் தான் உங்களிடம் அழைத்து வந்தோம். மருத்துவரும் இது ஒன்றும் பெரிய விஷியமில்லை அவனை எளிதில் நான் சரி செய்து விடுவேன் என்றார். பின் அவர் அவனிடம் திருப்பி கேட்டார். இறந்த மனிதனுக்கு உடலிலிருந்து இரத்தம் வருமா?. அதற்கு அவன் சொன்னான் வராது. மருத்துவரும் ஒரு கத்தியை எடுத்து அவன் உடலில் இலேசாகக்கீற இரத்தம் பீறிட்டது. அவன் குடும்பத்தினர் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர், மருத்துவர் பார்த்தாயா உன் உடலிலிருந்து இரத்தம் வருகிறது. எனவே நீ இறக்கவில்லை. புரிகிறதா என்று கேட்டார். அவன் மிக அமைதியாக சொன்னான். இதுவரை நான் இறந்தவர்கள் உடலிலிருந்து இரத்தம் வராது என்று நம்பி வந்தேன் இப்போதுதான் தெரிந்து கொண்டேன், இறந்தவர் உடலிலிருந்தும் இரத்தம் வரும்..!!

No comments:

Post a Comment