Friday 27 April 2018

மெஹந்தி அதிக நாட்கள் நிறம் மாறாமல் இருக்க வேண்டுமா?

மெஹந்தி அதிக நாட்கள் நிறம் மாறாமல் இருக்க வேண்டுமா?



 பண்டிகை காலம் என்றாலே பெண்களுக்கு மெஹந்திதான் ஸ்பெஷல். ஆனால், தங்கள் கைகளில் மெஹந்தி வைக்கும்போது அனைத்துப் பெண்களின் மனதிலும் தோன்றும் ஒரு எண்ணம் நம் கைகளில் மெஹந்தி நன்கு சிவக்குமா?, சிவக்காதா? என்பதுதான். எனவே கீழே குறிப்பிட்டுள்ள சில குறிப்புகளை பின்பற்றினால், நிச்சயம் உங்கள் கைகளில் மெஹந்தி நல்ல நிறத்தில் சிவப்பதோடு, நீண்ட நாட்கள் நிறம் மாறாமல் இருக்கும்.

👐 முதலில் யூகலிப்டஸ் தைலம் சிறிதளவு கையில் தடவி, பின்னர் மெஹந்தி போட்டுக் கொண்டால் நாம் எதிர்பார்க்கும் சிவந்த நிறம் நிச்சயம் கிடைக்கும்.

👐 மெஹந்திப் போட்ட பிறகு குறைந்தபட்சம் இரண்டு மணிநேரமாவது அதை கலைக்காமல் அப்படியே வைத்திருக்க வேண்டும். இரவு முழுவதும் அதை வைத்திருந்தால் கூடுதல் நிறம் பெறலாம்.

👐 கைகளில் மெஹந்தி நல்ல நிறத்தில் சிவக்க வேண்டுமானால், அதை கைகளுக்கு வைக்கும் முன்பாக கைகளில் சமையல் எண்ணெயைத் தடவிக் கொண்டால் நன்கு சிவக்கும்.

👐 மேலும், எலுமிச்சைச் சாற்றில் சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் கலந்து, அக்கலவையை கைகளில் வைத்த மெஹந்தி காய்ந்த பின்னர் பஞ்சின் உதவியால் தடவி 20 நிமிடங்கள் வைத்திருந்தால், மெஹந்தி நன்கு சிவக்கும்.

👐 மெஹந்தி வைத்து நன்கு உலர்ந்த பிறகு, அதை நீரில் கழுவாமல், உலர்ந்ததை சுரண்டி எடுத்துவிட்டு, கைகளில் கடுகு எண்ணெய் தடவினால், கையில் உள்ள மெஹந்தியின் நிறம் அதிகரிக்கும்.

👐 கைகளில் உள்ள மெஹந்தியில் எலுமிச்சைச் சாற்றினைத் தடவிய பின், ஒரு வாணலியில் கிராம்பை போட்டு நன்கு வறுத்து அடுப்பை அணைத்துவிட்டு, அப்போது வாணலியில் உள்ள கிராம்பில் இருந்து வெளிவரும் புகையில் கைகளை சிறிது நேரம் காட்ட வேண்டும். இதன் மூலமும் மெஹந்தியின் நிறம் அதிகரிக்கும்.

👐 கைகளில் மெஹந்தி வைத்தால் குறைந்தது 6 மணிநேரம் வைத்திருப்பதோடு, 3 மணிநேரத்திற்கு கைகளை நீரில் கழுவக்கூடாது. அப்படி கழுவினால், கைகளில் உள்ள மெஹந்தி சரியாக சிவக்காது.

No comments:

Post a Comment